Saturday, 17 August 2013

வைரமுத்து




வடுகபட்டியின் வைரமே.....!!
முத்தாய் நீ தோன்றியிருக்காவிட்டால்..
முத்தமிழும் ஏங்கியிருக்கும்
உன் பேனா முனைக்காக...!

Thursday, 8 August 2013

செல்லாக்காசு








பணம் என்றால் பிணமும்
வாயைத் திறக்கும் என்று சொன்னார்கள்....

இன்று அப்பிணத்தின்  நெற்றியில்
வைப்பதற்க்கு கூட
 என்னை எடுப்பதில்லையே ..!!!!

                                                         ----- 25  பைசா ( செல்லாக்காசு )
 

குடும்பம்



என் அப்பா சொன்னார் ....
எனக்கு பாட்டி கதை கூறினாள்  என்று ...

நான் சொன்னேன்......
எனக்கு பாட்டி இருந்தாள்  என்று .....

என் மகன் கேட்டான்.........   
பாட்டி  என்றால் என்னவென்று.. .. .. ..